அடித்துக் கூறுகின்றார் ரணில்

tamilni 392

அடித்துக் கூறுகின்றார் ரணில்

இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இனவாத கருத்துக்களை கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியை எந்த தரப்புக்கு வழங்குவதென நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களை எவரும் முட்டாள்களாக்க முடியாது என்றும், அவர்கள் ஜனநாயகவாதிகளையும், இனவாதிகளையும் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version