தேசிய அரசமைப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
எதிரணி தரப்பில் இருந்தே இவ்வாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தற்போதைய சூழ்நிலையில் சர்வக்கட்சி மாநாடென்பது பொருத்தமான நடவடிக்கை.
அதில் பங்கேற்று, கட்சி அரசியலுக்கு அப்பால், நாடு தொடர்பான யோசனைகளை கட்சிகள் முன்வைக்க வேண்டும்” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
#SriLankaNews
Leave a comment