குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .
இந்த புதிய சட்ட திருத்தம் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
குற்றத்தில் ஈடுபடும் போது நபரொருவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்கெதிராக மரண தண்டனை விதிக்கப்படவோ அல்லது அமல்படுத்தப்படவோ கூடாது என கூறியுள்ளார்
எனினும் அதற்குப் பதிலாக பொருத்தமான வேறொரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய திருத்தம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்
இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த ஒரு சிறப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதென நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a comment