இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தயார்படுத்திவருகின்றார்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை வழமையாக முன்வைக்கப்படும். எனினும், அதனை நிறைவேற்றிக்கொள்வது சவாலுக்குரிய விடயம்.
எனவேதான், ஜனாதிபதிமீது நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
#SriLankaNews