1 14
இலங்கைசெய்திகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

Share

பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகளுக்குள் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பிரசார காலம் நிறைவடைந்ததன் பின்னரும் பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு கட்சி ஆதரவாளர்களை ஹரினி தூண்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதன் அடிப்படையிலேயே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாரதூரமான அளவில் தேர்தல் சட்டங்களை மீறியதாகவும் இதன் ஊடாக அவர் பிழையான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாகவும் அந்த உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஏனைய எந்தவொரு எதிர்க்கட்சியோ அதிகாரபூர்வமாக கருத்துக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...