ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையில் பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment