10 10
இலங்கைசெய்திகள்

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

Share

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பில் கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்த கருத்துக்கணிப்புக்களை தேர்தல்கள் ஆணையகம் எதிர்க்கிறது இந்தநிலையில், ஹெலகுரு (Helakuru) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி (IHP) ஆகியவை கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

ஹெலகுரு என்பது ஒரு பிரபலமான சிங்கள மொழி செயலியாகும். இந்த செயலியின் கணிப்பின்படி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 80வீத வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி, அநுரகுமாரவுக்கு 37 வீத வெற்றி கிடைக்கும் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு 36 வீத வெற்றி கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.

இருப்பினும், கடைசி நிமிட அரசியல் மாற்றங்களைக் கணக்கிட இயலாமை காரணமாக இந்த கருத்துக்கணிப்புக்களை விமர்சகர்கள் நிராகரித்துள்ளனர்.

குறிப்பாக ஹெலகுரு செயலிக்கு 30ஆயிரம் பேர் தமது கருத்துக்களை கூறினாலும், அதில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஹெலகுரு தங்கள் செயலியின் பயனர்களை நம்பியிருப்பதால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர் என்ற விடயமும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த கருத்துக் கணிப்புகள், தேர்தலில் ஒரு செயற்கையான தலையீடு என்று தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...