22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Share

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளாட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, எந்தக் கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாமையினால் இவ்வாறான வாக்கெடுப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கைமய, உள்ளாட்சி ஆணையரால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஆளும் தரப்பு அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர், மேயராக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 48 ஆகும்.

.ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...