7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

Share

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த விlயத்தை விசாரணை பிரிவு பழைய பொலிஸ் தலைமையாக கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இந்த அலுவலகம் ஆர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் இன்று முற்பகல் குறித்த பிரிவு அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணம் சொத்துக்கள் குவித்தல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையின் கீழ் இந்த விசாரணை பிரிவு இயங்க உள்ளதாகவும் பிரதி பனிப்பாளர் நாயகம் ஒருவரும் இந்தப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த பிரிவின் பணிப்பாளர் நியாயமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவு ஆகியனவற்றின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபராக அசங்க கரவிட்ட கடமையாற்றி வருகின்றார்.

குற்றம் ஒன்றின் மூலம் உழைக்கப்படும் பணம் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை 30 நாட்களுக்கு தடை செய்யவோ அல்லது பறிமுதல் செய்வதற்கோ இந்த விசேட விசாரணைப் பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவிக்கப்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் காணப்பட்டாலும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...