4 50
இலங்கைசெய்திகள்

நாட்டுக்கு வரும் டொலர்களுக்கு புதிய வரி அறிமுகம்

Share

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் முதல் 15 சதவீத வரி செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக, இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15 விடவும் அதிக வரி சதவீதத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த வரி கட்டாயம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சமகாலத்தில் நாட்டுக்குள் ஒன்லைன் ஊடாக அதிகளவான டொலர்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் மற்றும் fiverr போன்றவை ஊடாக திறமையான இளைஞர்கள் பாரிய அளவிலான டொலர்களை நாட்டிற்கு ஈட்டித்தருகின்றார்கள். இவ்வாறான முறையில் நாட்டிற்கு நன்மை ஏற்படுத்துபவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஏன் வரி விதிக்கப்படுகின்றது?” என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர்.

“இதனை விடவும் அதிக வரியை அமுல்படுத்தவே யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் எங்களால் இந்த சந்தர்ப்பத்தில் வரி அமுல்படுத்த நேரிட்டுள்ளது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் அதனை விடவும் கடுமையான வரிகளுக்கு செல்ல நேரிடும். மக்கள் மீது வரி சுமையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது.

எனினும் வேறு நிவாரணங்களை வழங்க முடியுமா என்பது குறித்து நிதி அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் அறிவிக்கின்றேன். தற்போதைக்கு இதனையே கூற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...