இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நவீன வசதி

Share
20 2
Share

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நவீன வசதி

வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கும் ஏணிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குள் செயற்படும் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை பல குற்றச்சாட்டுக்கள் பயணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் குறித்த ஏணியில் இறங்கும் போது பயணி ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விமான நிலைய நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஏணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் ஏணிகள் 30 வருடத்திற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...