இலங்கைசெய்திகள்

வாகன வருமான உரிமம் அறிமுகமாகவுள்ள புதிய முறை

tamilni 359 scaled
Share

வாகன வருமான உரிமம் அறிமுகமாகவுள்ள புதிய முறை

வாகன வருவாய் உரிமம் வழங்குவதற்கான புதிய முறை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய முறை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இணைந்து புதிய முறைமையை (eRL 2.0) அறிமுகப்படுத்தவுள்ளது.

இதேவேளை அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் பிராந்திய மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வருவாய் உரிமம் பெறுவதற்கான இணையவழி(online) முறையும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள முறைமை (eRL 1.0) சில மாற்றங்களுடன் அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய eRL 2.0 முறையை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் டிஜிட்டல் வளர்ச்சியை உருவாக்கும் செயற்பாட்டில் மிக முக்கிய படியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...