22
இலங்கைசெய்திகள்

புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

Share

புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங் பிரதிநிதிகள் குழுவிற்கும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனாரத்னவிற்கும் (Madhura Senarathna) இடையில் இடம்பெற்றுள்ளது.

அங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது உச்ச நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்பட வேண்டுமென இரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, போட்டிப் பரீட்சை நடத்தி ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும் என்றும் அதிகபட்சமாக 45 வயது வரை வயது வரம்பைக் கருத்தில் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உரிய தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வேறு அரச அலுவலகங்களுக்கு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...