24 66615d08c2369
இலங்கைசெய்திகள்

இலங்கை விமான நிலையங்களில் புதிய நடைமுறை

Share

இலங்கை விமான நிலையங்களில் புதிய நடைமுறை

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய முத்திரைகளின் பாவனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திணைக்களம் வருகைக்காக நீல நிற முத்திரையையும் புறப்படுவதற்கு பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தைத் தவிர, துறைமுகங்கள் மற்றும் பயணிகள் பயணக் கப்பல்களுக்கும் இதேபோன்ற முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் மூன்று தனித்தனி முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய கூறியுள்ளார்.

புதிய முத்திரைகள் அறிமுகம் தொடர்பான விவரங்களை அளித்த ஹர்ஷ , 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முத்திரையை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பயன்படுத்தி வருவதோடு தற்போது அது பல்வேறு தரப்பினரால் எளிதில் தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பழைய முத்திரையில் முறைகேடு நடப்பதாக பல முறைப்பாடுகள் வந்தாலும், புதிய முத்திரைகளை அறிமுகம் செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து தாமதமாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நகல் எடுக்க முடியாத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....