ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் படை அதிகாரிகளை இணைத்துக்கொண்டே அவர் இக்கட்சியை உருவாக்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews