rtjy 299 scaled
இலங்கைசெய்திகள்

வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு

Share

வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு

நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய அன்றையதினம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன் ஆயத்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அப்போதும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல தடவைகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரியை மேலும் அதிகரிக்குமாறு கூறுகின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் அரசின் வருமானம் போதவில்லை என்பதாகும்” என அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

எங்களால் இனியும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த முடியாது. நாங்கள் அதிகபட்சமாக சுமையை ஏற்றியுள்ளோம். அரசின் வருவாய் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களிடம் நாங்கள் அந்த விடயங்களை தெளிவுபடுத்துவோம்.

என்ன செய்தாலும் இனி வரியை உயர்த்த முடியாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...