1 21
இலங்கைசெய்திகள்

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

Share

இந்த ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு (SriLankan Airlines) மூன்று புதிய விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விமான குழுவில் சேர்ப்பதற்காக நிறுவனம் விமானங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

போதுமான விமானங்கள் இல்லாததால் விமான தாமதங்களைச் சமாளிக்க சிறிலங்கன் எயார்லைன்ஸ் தற்போது சிரமப்பட்டு வருகிறது.

2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 செப்டம்பர் மாதம் வரை, 548 விமானங்கள் 3 முதல் 56 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக அறிக்கையும் வெளியாகியது.

அத்தோடு, இந்த தாமதங்களை தவிர்பதற்கு ஏனைய விமான நிறுவனங்களின் உதவியைப் பெற 2023 ஆம் ஆண்டில் நிறுவனம் $784,000 செலவிட்டது.

இந்த நிலையில், போதுமான விமானங்கள் இருந்தால், மற்ற விமான சேவைகளுக்குச் செலவிட வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டிப்படுகிறது.

இவ்வாறதொரு பின்னணியில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தேவை மதிப்பீட்டின் படி, 27 விமானங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் தற்போது 21 மட்டுமே உள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...