6 53
இலங்கைசெய்திகள்

இந்தியா – இலங்கைக்கிடையே புதிய கப்பல் சேவை

Share

இந்தியா – இலங்கைக்கிடையே புதிய கப்பல் சேவை

இந்தியாவின்(India) தமிழகத்துக்கும் இலங்கைக்கும்(Srilanka) இடையே மற்றுமொரு புதிய பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் சேவையானது இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு மணிநேரத்தில் 250 பயணிகள் பயணிக்கக் கூடிய வகையிலான கப்பல் சேவையை இயக்குவதற்கான விருப்பம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தமிழக கடல்சார் சபை தெரிவித்துள்ளது.

இதற்காக இராமேஸ்வரத்தில் தற்காலிக பயணிகள் முனையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு சுங்க சோதனை சாவடியை அமைப்பதற்கும் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கப்பல் சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் கடந்த கால பொறுமையை மீட்டெடுக்கும் எனத் தமிழக கடல்சார் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...