கோட்டா மஹிந்த 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

15 பேருடன் புதிய அமைச்சரவை! – பஸில், நாமல், சமல், ஷசீந்திர ‘அவுட்’

Share

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடெங்கும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக்கொண்ட 15 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிச்சயமாகப் பங்குபெறுவார் என்று தெரியவருகின்றது.

15 பேரைக் கொண்ட அமைச்சரவையானது நாளை மாலை நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

எனினும், இந்த அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...