20
இலங்கைசெய்திகள்

கூட்டணி அமைக்கும் தொடர் பேச்சுவார்த்தை: ராஜபக்சர்களின் அடுத்த நகர்வு

Share

கூட்டணி அமைக்கும் தொடர் பேச்சுவார்த்தை: ராஜபக்சர்களின் அடுத்த நகர்வு

பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மொட்டு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு நேற்று (31) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விஜேராமாவில் உள்ள இல்லத்தில் கூடியது.

இதன்போது எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சஷீந்திர, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து இன்று விவாதித்தோம் எனவும், உழைக்கும் மக்களாக மே தினத்தை கொண்டாட முடிவு செய்தோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சி.பி. ரத்நாயக்க ஆகியோர் கட்சி பிரதிநிதிகளிடம் இது குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும், பிரதேச சபைத் தேர்தலில் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...