கடற்தொழிலாளி படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கடற்படை – நள்ளிரவில் சம்பவம்

கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது வடமராட்சி கடற்பரப்பில்கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது.

படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.

தமது படகு மீது கடற்படையின் அதிவேகப் படகு ஏறிச் சென்றது என்று கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20220501 071505

#SriLankaNews

Exit mobile version