பூரண ஹர்த்தால் 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா அரசைப் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டங்களையும் தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்துத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ஆனால், ஜனாதிபதியும் அரசும் மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதேச்சாதிகாரமாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிராகக் கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்குத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், கல்வி உட்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்குத் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவாக நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை ரயில்வேத் தொழிற்சங்கத்துடன் இணைந்த சுமார் 40 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மேலும் இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கித் தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் இன்றைய ஹர்த்தாலில் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்துறை ஊழியர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அதேநேரத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர்கள் கையில் கறுப்புப் பட்டி அணிந்து இன்றைய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பார்கள்.

இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு ஆதரவாக வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடி ஒத்துழைக்குமாறும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றிவைக்குமாறும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஒலிபெருக்கி மூலம் பிரார்த்தனைகளை நடத்துமாறும் ஹர்த்தால் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையோ தவிர்த்து அமைதியான முறையில் போராட்டங்களைத் தொடருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அரசம் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தவறினால் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தாலாக இது மாற்றப்படும் எனவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் எச்சரித்துள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...