21 6
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண் வேட்பாளர்

Share

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண் வேட்பாளர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான றஞ்சினி கனகராசா கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட றஞ்சினி கனகராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் தெரிவுக் குழுவிலும் பங்குபற்றியிருந்தார்.

கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய இவர், கட்சியின் பிரதி தவிசாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தழிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தெரிவுப் பட்டியலில் இவரின் பெயர் பிரதானமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இவருக்கான தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண் வேட்பாளர் | National List Seat Of Itak

தழிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்கும் இவரின் பெயர் தேசிய பட்டியலில் இடம்பெற வேண்டுமென்பது பலரதும் கோரிக்கையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...