மக்கள் எதிர்நோக்கவுள்ள அபாய நிலை! 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் வேலை நேரம்
இலங்கைசெய்திகள்

மக்கள் எதிர்நோக்கவுள்ள அபாய நிலை! 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் வேலை நேரம்

Share

மக்கள் எதிர்நோக்கவுள்ள அபாய நிலை! 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் வேலை நேரம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அஸ்வெசும நலன்புரி திட்டம் மற்றும் தற்போதைய புதிய தொழிலாளர் சட்டமூலங்களின் ஊடாக அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச தொழிலாளர் சட்டமூலத்தினூடாக அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதுவரை தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13 சட்டங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அஸ்வெசும நலன்புரி திட்டம் மற்றும் தற்போதைய புதிய தொழிலாளர் சட்டமூலங்களின் ஊடாக அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக தொழிலாளர்களின் 8 மணிநேர வேலை நேரத்தை நீக்கி அதனை 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலாளர்களின் அனுமதியுடன் அதனை 16 மணிநேரமாக அதிகரிப்பதற்கான அபாயமும் காணப்படுகின்றது. நாளாந்தம் 8 மணிநேர வேலைநேரம், உலகளாவிய ரீதியில் பல உயிர்களை இழந்து கடினமான போராட்டத்தின் பின்னர் பெறப்பட்ட ஒன்றாகும். அதனை இல்லாது செய்வது உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...