9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நானாட்டான் பிரதேசத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!

Share

மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

அச்சங்குளம், அருகங்குண்று போன்ற கடற்கரையோரப் பிரதேசங்களில் எதிர்காலத்தில் சுனாமி தொடர்பான அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது குறித்த அனர்த்தங்களில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும், அது சம்பந்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒத்திகை நிகழ்வு இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகங்கள், இராணுவம், பொலிஸ், வேல்ட் விஷன், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, சென். ஜோன் அம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கங்கள் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஒத்திகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்தகுமார் உட்பட வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...