சர்ச்சையில் சிக்கிய நாமல்
இலங்கைசெய்திகள்

சர்ச்சையில் சிக்கிய நாமல்

Share

சர்ச்சையில் சிக்கிய நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார விநியோகம் தொடர்பான நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளீன் ஹேவகே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மின்சார சபை இவ்வாறு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீரகெட்டிய இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக மின் உற்பத்திக்கான இயந்திரங்களை வழங்குவதற்காக 26 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 26 லட்சம் ரூபாய் நிலுவை மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தமக்கோ அல்லது தனது தந்தைக்கோ இதுவரை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருமண விழாவுக்கான அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் தகவல் கேட்கவுள்ளதாக நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...