5
இலங்கைசெய்திகள்

மத ஸ்தலங்களில் அரசியல் காடைத்தனம் : அரசாங்கத்தை சாடும் நாமல்

Share

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசிலை புகுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று(01) ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மத ஸ்தலங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கிடைக்கும் பணத்தையும் கணக்காய்வு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டங்களையும், அப்படி கிடைக்கும் பணம் கறுப்பு பணம் என்று கூட அரசாங்கம் சொல்லும்.

இன்று அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க அரச பலத்தை பயன்படுத்தி தங்களின் அரசியலை திணிக்க முயற்சிக்கிறது.

இளைஞர் சங்கங்கள் மற்றும் கிராமத்திலுள்ள மரண சங்கங்களிலும் அரசாங்கம் தங்களின் அரசியலை புகுத்த அரச அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

தங்களின் தவறுகளை மூடி மறைக்க அரச பணியார்களை பலிகடாவாக்குகின்றனர்.

உதாரணமாக 300 கொல்கலன்களை விடுவித்த சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளை பலிகடாவாக்கினர். ஒன்றும் செய்ய முடியாத போது தான் பழிவாங்கல் ஆரம்பமாகிறது.அரசாங்கம் அதையே இன்றும் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 3
செய்திகள்உலகம்

ஈரானின் அதிரடி பதிலடித் தாக்குதல்கள்: அண்டை நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான்...

02 2
உலகம்செய்திகள்

பெய்ரூட் மற்றும் டெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்...

01 2
உலகம்செய்திகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திய கத்தார்: வான்வழித் தாக்குதல்களால் ராஜதந்திர உறவில் விரிசல்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில், ஈரானுடன் தற்போது எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை...

25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...