4
இலங்கைசெய்திகள்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை.. வெளியான முக்கிய அறிவிப்பு

Share

எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, ஓகஸ்ட் 6 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகள் முன்னெடுக்க தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த திகதிக்கு பின்னர், பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துதல், மேற்படி தேர்வுக்கான யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், சுவரொட்டிகள், பதாகைகள் வழங்கல் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், துண்டுப்பிரசுரங்கள் அல்லது அதுபோன்ற பொருட்களை மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுதல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, நாடு முழுவதும் 2,787 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...