5
இலங்கைசெய்திகள்

மத ஸ்தலங்களில் அரசியல் காடைத்தனம் : அரசாங்கத்தை சாடும் நாமல்

Share

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசிலை புகுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று(01) ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மத ஸ்தலங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கிடைக்கும் பணத்தையும் கணக்காய்வு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டங்களையும், அப்படி கிடைக்கும் பணம் கறுப்பு பணம் என்று கூட அரசாங்கம் சொல்லும்.

இன்று அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க அரச பலத்தை பயன்படுத்தி தங்களின் அரசியலை திணிக்க முயற்சிக்கிறது.

இளைஞர் சங்கங்கள் மற்றும் கிராமத்திலுள்ள மரண சங்கங்களிலும் அரசாங்கம் தங்களின் அரசியலை புகுத்த அரச அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

தங்களின் தவறுகளை மூடி மறைக்க அரச பணியார்களை பலிகடாவாக்குகின்றனர்.

உதாரணமாக 300 கொல்கலன்களை விடுவித்த சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளை பலிகடாவாக்கினர். ஒன்றும் செய்ய முடியாத போது தான் பழிவாங்கல் ஆரம்பமாகிறது.அரசாங்கம் அதையே இன்றும் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...