9 16
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பூகோளவியல் பிரபலத்துக்கு காரணம்.. நாமல் வெளிப்படை!

Share

தனி தமிழீழ கோரிக்கையே ஈழத் தமிழர்களுக்கு பூகோளவியல் அரசியலில் முக்கியத்துவம் வகிக்க காரணமானது என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பானர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த செவ்வியில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“மலையக மக்கள் தனி இராச்சியம் கோரவில்லை, ஆதலால் அவர்களை எந்த அரசியல் கட்சியும் பெரிதாக பார்க்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை என்பதாலேயே.

ஆனால், உலகத்தில் எந்த நாட்டுக்கு சென்றாலும் யாழ்.தமிழர்கள் பற்றியே பேசுகின்றனர். மேலும் வடக்கு பிரச்சினையை அல்லது வடக்கு கிழக்கு பிரச்சினையை கேட்கின்றனர்.

ஆனால், தெற்கில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தொடர்பில் பேசுவதில்லை. ஏனென்றால் பூகோலவியல் அரசியலுக்கு அவை அவசியமில்லை.

நுவரெலியாவில் வீடு கட்டப்பட்டதா?, பாடசாலை இருக்கிறாதா? என்பது அவசியமில்லை. பூகோலவியல் அரசியலுக்கு தேவை வடக்கு கிழக்கின் நிலைமை.

அது டயஸ்போராக்களை முன் கொண்டு உருவாக்கப்பட்ட காலசாரத்தால் ஏற்பட்டதால் ஆகும். மதம் சார்ந்த அரசியலை எமக்கு உலகத்தில் ஒழிக்க முடியாது.

ஆனால். ஆட்சியில் அவற்றை உள்ளடக்க கூடாது. உதாதாரணத்திற்கு டுபாயை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய நாடு. அதில் யாரும் வாழலாம். அதேமாதிரியான ஒரு சட்டவாக்கத்தை நாம் அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...