5 17
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

Share

நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைககுழுவிற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிமடை திரையரங்கில் அண்மையில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் பிரசாரக் கூட்டத்திற்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டம் நடைபெறும் போது மண்டபத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த பாடசாலை மாணவன் மற்றும் பல்கலைக்கழக மாணவனிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த விளையாட்டுத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...