9 19
இலங்கைசெய்திகள்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

Share

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள நாமல் ராஜபக்ச, இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

மேலும். இந்த நினைவுச்சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்து நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாது.

எனினும், இலங்கை இராணுவத்திற்கு எதிராக தவறான இனப்படுகொலை கதையை, கனடா ஊக்குவிப்பதாக, அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுக் கதையை திரித்து, சிதைக்க நீண்ட காலமாக முயன்று வரும், தமிழ் புலம்பெயர் சமூகத்தினரிடையே உள்ள சில பிரிவுகளால், கனேடிய அரசாங்கத்தின் மீது, செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும் நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கைக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுக்கக்கூடும் என்று நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...