7 31
இலங்கைசெய்திகள்

கூட்டிணையும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாரிசுகள்..

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனான தஹாம் சிறிசேனவை தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு தஹாம் சிறிசேனவை, நாமல் ராஜபக்ச அழைத்துள்ளார்.

முந்தைய தேர்தல்களிலும், தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார்.

வலுவான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை, மேலும் எதிர்காலத்தில் அவர் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் பத்தரமுல்லையில் போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் நாமல் ராஜபக்ச மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இணைந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...