rtjy 126 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

Share

இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த இந்திய நிறுவனம், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கை இறக்குமதியாளர், அத்துடன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட துறைமுகம் பற்றிய விபரங்களைக் கேட்டு இந்த இந்திய நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

அத்துடன் இந்தியாவின் மத்திய, மாநில மற்றும் பிராந்தி உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்திய சுங்கம் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக முறையிடப்படும் என்றும் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

உண்மையான ஏற்றுமதியாளர்களின் நற்பெயரைக் காப்பாற்ற இதுபோன்ற வேண்டுமென்றே மோசடி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று குறித்த இந்திய நிறுவனம் கேட்டுள்ளது.

அத்துடன் இந்த இந்த தயாரிப்புகளை தாங்கள் இதுவரை எந்த தரப்பினருக்காகவும் உற்பத்தி செய்யவில்லை அல்லது ஏற்றுமதி செய்யவில்லை என்றும் இந்திய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இம்யூனோகுளோபுலினை யார் கொள்வனவு செய்தார்கள் என்பதைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று மருத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...