mahinda 3 1
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மைனா கோ கம’ தீ வைத்து எரிப்பு! – இரும்புக் கம்பிகளுடன் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அட்டகாசம்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துபவர்களால் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து, தீ மூட்டிக் கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டது.

இன்று அலரி மாளிகைக்கு நேரில் வந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள், மஹிந்தவைப் பதவி விலக வேண்டாம் எனக் கோரினர். அதன்பின்னர் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’வுக்கு வந்த அவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களைக் காண்பித்தனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

mahinda 1mahinda 2

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...