mahinda 3 1
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மைனா கோ கம’ தீ வைத்து எரிப்பு! – இரும்புக் கம்பிகளுடன் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அட்டகாசம்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துபவர்களால் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து, தீ மூட்டிக் கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டது.

இன்று அலரி மாளிகைக்கு நேரில் வந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள், மஹிந்தவைப் பதவி விலக வேண்டாம் எனக் கோரினர். அதன்பின்னர் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’வுக்கு வந்த அவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களைக் காண்பித்தனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

mahinda 1mahinda 2

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...