de5df678 9b3d 4c85 8e39 e410851f981a
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மயிலிட்டி – கட்டுவன் பிரதான வீதியை திறந்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

Share

மயிலிட்டி – கட்டுவன் பிரதான வீதியை திறந்து வைக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு கடிதம் ஒன்றினையும் வழங்கி வைத்தனர். அக் கடிதத்தில் உள்ளதாவது,

மயிலிட்டி – கட்டுவன் வீதி புனரமைக்கப்பட்டு சிறியளவு தூரம் புனரமைக்கப்படாமல் உள்ளது.

இடம்பெயர்ந்து 35 ஆண்டுகளின் பின்னர் தற்போது எமது சொந்த ஊரான மயிலிட்டியில் வசித்து வருகின்றோம்.

மயிலிட்டி – கட்டுவன் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் 400 மீட்டர் தூரம் வரை தற்போது புனரமைக்கப்படாது உள்ளது.

ஏனெனில் தேவையின் நிமித்தம் தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், மல்லாகம், சுன்னாகம் போன்ற இடங்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அரச ஊழியர்கள்கள் இவ் வீதியானது புனரமைக்காததால் பல இன்னல்களை எதிர் கொள்கின்றனர்.

இவ்விதி புனரமைக்கப்படாததால் வேறு வீதியால் மூன்று கிலோமீட்டர்கள் தூரம் சுற்றியே மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே நமது நிலையை கருத்தில் கொண்டு இதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...