24 66038fa01656a
இலங்கைசெய்திகள்

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

Share

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாக மைத்திரி கூறியிருந்தார்.

இந்த வாக்கு மூலம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றிற்கு அழைத்து விசாரணை நடத்துமாறு கோர உள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்கு மூலம் குறித்த அறிக்கையை குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...