25 6848dbafc13cc
இலங்கைசெய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் – தமிழரசு கட்சி ஒப்பந்தம் : சாணக்கியன் விளக்கம்

Share

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பாக நாங்கள் கூறியதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள்.

நாங்கள் சில சபைகளில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40 சதவீதமான தமிழர்களும் 60 சதவீதமான முஸ்லிம்களும் உள்ள மூதூர் சபையில் தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.

யாழ். மாநகர சபையில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

அதேநேரம், 60 சதவீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அடுத்த அடி : நான்காவது F-35 போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்

ஈரானிய(iran) ஆயுதப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்பு, வடமேற்கு ஈரானின் தப்ரிஸில் இஸ்ரேலிய F-35 போர்...

12 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக...

13 1
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை...

11 1
உலகம்செய்திகள்

பற்றி எரியும் நாடுகள் – இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் – சூளுரைக்கும் ஈரான்

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நேற்று...