ஆயிஷா கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

பாத்திமா ஆயிஷா

களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம சிறுமியான ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

இதன்போது அதிகளவான மக்கள் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version