அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதானவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின்போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள காரணத்தால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#SriLankaNews