10 5
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம்

Share

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம்

நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 800 வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தத் தவறியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

இந்த வைத்தியர்கள் தொடர்பில் சட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால கோப் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 31 மில்லியன் ரூபா செலவில் கொண்டுவரப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமை தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய அமைச்சுகளுடன் ஒப்பிடும் போது அதிகளவு மேலதிக நேரங்களை செலுத்தும் சுகாதார அமைச்சின் மோசமான நிர்வாகம் நாட்டுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...