24 66497e2da0368
இலங்கைசெய்திகள்

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் – தென்னிலங்கையில் மாற்றம்

Share

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் – தென்னிலங்கையில் மாற்றம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆண்டு தினம் இன்று தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

30 வருடங்களாக ஆயுத போராட்டம் மௌனித்து இன்றுடன் 15 வருடங்களை கடந்துள்ளன.

இது தொடர்பான நிகழ்வுகள் தாயக்கத்திலும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

இன்நிலையில் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டதுடன், வலிசுமந்த நிகழ்வுகளை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் சொந்த மக்களை அழ வைத்து நாங்கள் வென்றது போர் அல்ல என குறித்த இளைஞன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தென்னை மரத்தின் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதன் மூலம் முள்ளிவாய்க்காலில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூறுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை அடையாளப்படுத்த இந்த தென்னை மரங்கள் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் அழுது கண்ணீர் வடிக்கும் தாய்மார் ஈடி இணையில்லாதவர்கள். தனது பிள்ளையின் இழப்பின் வலி தாய் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

தமிழ் மக்களின் கண்ணீரின் வலி தென்னிலங்கை மக்களுக்கு புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளதாகவும் சில சிங்கள இளைஞர்கள் பதிவிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...