24 66486f1836db4 1
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு

Share

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு

தனி நாடு கோரிய 3 தசாப்த உரிமைப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மிகக் கொடூரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது.

உயிரைக் காத்துக் கொள்ள, உணவைப் பெற்றுக்கொள்ள, உறவுகளை காப்பாற்றவென்று அப்போது முள்ளிவாய்க்கால் மண்ணெங்கும் ஓடித்திரிந்தது தமிழினம்.

கண் முன்னே, தாயின் உயிர் பிரிந்ததையும், தான் பெற்ற பிள்ளையின் கை கால்கள் சிதறுண்டதையும், பாலுக்காய் தாயின் மார் தேடிய பச்சிளம் ஒன்று தாயின் உயிர் பிரிந்தது தெரியாமல் துடித்ததையும் எங்கணம் மறப்பது.

நாளை, எம் தாய்நாடு என்ற வேட்கையுடன் தன்னை அர்ப்பணித்து களமாடிய வீரர்களின் கண் முன்னே அந்த தாயகக் கனவு சிதைந்த கொடூரத்தின் வேதனையையும் எப்படி மறப்பது.

இப்படி துயரங்களை மட்டுமே கொடுத்த அந்த கொடூர நினைவுகளை சுமந்து இன்றும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் சிந்தி கதறுகின்றது தமிழினம்.

அன்று கண்ட வேதனைகளை இன்றும் மீண்டும் மீட்டிப் பார்க்கும் வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் போது இளையவர்கள் ஒன்றிணைந்து கண்முன்னே கொண்டு வந்திருந்தனர்.

வரலாறு எமக்கு கொடுத்த துயரங்களை மீண்டுமொரு முறை மீட்டிப் பார்க்கும் தருணம் இது,

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...