இன்றைய தினம் மூதூர் முஸ்லீம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வு மூதூர் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.
இதன்போது, 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
#srilankaNews