வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Share

இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவேந்தும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வார நிகழ்வு யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா. அரியகுமார், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்பட்டது.

IMG 8831

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...