ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண்

24 66484812441f7

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண்

தமிழீழத் தாயகம் கோரிய உரிமை யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன.

மிகக் கோரமான அந்த இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நிறைவுறும் போது அங்கு சித்திரவதைகள் அனுபவித்து மாண்டனர் பலர்.

இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தன்னுடைய உறவுகளை எண்ணி கண்ணீர் விட்டு கதறி தமது அஞ்சலிகளை இன்று செலுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிக்கு அருகில் திரண்டுள்ள மக்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் விட்டு கதறும் உணர்வுபூர்வமான தருணங்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறி வருகின்றது.

Exit mobile version