IMG 3976 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாம் இறக்கும் முன்னாவது நீதி கிட்டுமா? – முல்லையில் உறவுகள் போராட்டம்

Share

இதுவரை போராடியவர்களில் 120 பேருக்கு மேல் இறப்பு! நாம் இறக்கும் முன்னாவது நீதி கிட்டுமா?” என்ற ஏக்கத்தோடு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவில் தொடரும் தொடர் போராட்டத்தின் 1906 நாளான இன்று இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது .

போராட்டத்தில் ஈடுபட்ட 300 இற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “இதுவரை போராடியவர்களில் 120 பேருக்கு மேல் இறப்பு; நாம் இறக்கும் முன்னாவது நீதி கிட்டுமா?, OMP ஒரு கண்துடைப்பு நாடகம், உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் எதிர்பாக்கிறோம், இன அழிப்புக்கான நீதி அவசியம், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?, தண்டனைக்கு விலக்களிக்கும் கலாசாரம் இலங்கையில் தொடர்கின்றது, எமக்கு வேண்டும் சர்வதேச நீதி விசாரணை உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளைத் தாங்கி நின்றனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...