images 8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலை பகுதியில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் இன்றையதினம்(29) உத்தரவிட்டுள்ளார்.

குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது இரு பணியாட்கள் ஊடாக உழவியந்திரத்தின் மூலம் மே மாதம் 10 திகதி குருந்தூர் மலைபகுதியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்துக்கு முறைப்பாடு அளித்திருந்தார்.

அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இரு விவசாயிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே மாதம் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, தொடர்ந்து மே 29 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மீண்டும் ஜூன் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...