tamilni 303 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

Share

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக பிரதிவாதிக்கு தாக்குதல்கள் குறித்த முன்னறிவிப்பு கிடைத்திருந்தது.

அத்துடன் 2022 இல் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் போது அவருக்கு முன்னறிவிப்பு கிடைத்தது. எனினும் அவர் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதாக ரகுமான் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோன் தான் வகித்த பதவிகளுடன் தொடர்புடைய பொறுப்புகளை நிறைவேற்ற இயலாமையை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தென்னகோனை நிரந்தரமாக இலங்கையின் பொலிஸ் மா அதிபராக நியமிக்க முயற்சித்தால் அது சட்டத்தின் மீது நேரடித் தாக்குதலை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை நிரந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவதாக அமையும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னக்கோனை நிரந்தரமாக மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கினால், அவர்களின் செயற்பாடுகளும் அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவதாக அமையும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியை ஏற்பதற்கும், மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிகளைச் செய்வதற்கும் இடைக்காலத் தடை விதிக்குமாறு முஜிபுர் ரகுமான் தனது மனுவில் கோரியுள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவதை தடுக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசபந்து தென்னகோன், சட்டமா அதிபர் மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முஜிபுர் ரஹ்மானின் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...